ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 61ஆவது கூட்டம் அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்றது. பல்வேறு தரப்புகள் கூட்டாக சீர்திருத்தம் மேற்கொண்டு, உலக மனித உரிமை நிர்வாகத்தை மேம்படுத்தி, மனித உரிமை இலட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்தது.
இக்கூட்டத்தில் சீன பிரதிநிதி கூறுகையில்,
பல்வேறு நாடுகளுடன் இணைந்து, சர்வதேச மனித உரிமை இலட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்றவும் மனித பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைக்கவும் சீனா விரும்புகின்றது என்றார்.
பல்வேறு தரப்புகள், ஐ.நா மனித உரிமை கவுன்சில் நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவை அடிப்படையாக கொண்டு, மனித உரிமையைப் பேணிக்காத்து முன்னேற்றும் ஆரம்ப இலக்கை நினைவு கூர்ந்து, மனித உரிமை இலட்சியத்தை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட நாடுகளின் மனித உரிமை பிரச்சினைகள் குறித்த விவாதத்தில் சீனா வேண்டுகோள் விடுப்பதாக சீன பிரதிநிதி தெரிவித்தார்.
