42 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மேற்குவங்க மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர்  

Estimated read time 0 min read

42 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 21) காலை மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஜூனியர் டாக்டர்கள் ஓரளவுக்கு மீண்டும் பணியில் சேர்ந்தனர்.
ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஜூனியர் டாக்டர்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மீண்டும் தங்கள் பணியில் சேர்ந்தனர். ஆனால் வெளிநோயாளர் பிரிவில் இன்னும் பணியில் சேரவில்லை.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜூனியர் மருத்துவர் ஒருவர் கூறுகையில், அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளில் மட்டுமே பணிக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author