இன்றைய (செப்டம்பர் 23) வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, புதிய உச்சத்தை எட்டியுள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் கணிசமான வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது.
சென்செக்ஸ் 290 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 84,881 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் நிஃப்டி 25,900 புள்ளிகளைக் கடந்து முதல் முறையாக 25,925 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.
இதில் மருந்துப் பங்குகள் 1% அதிகரித்தன. வாகனப் பங்குகள் 0.9% உயர்ந்தன. நிதிச் சேவைகள், எப்எம்சிஜி ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பங்குகளும் உயர்ந்தன.
கடந்த வாரம் பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 இரண்டும் தலா 1% உயர்ந்து முடிவடைந்ததில் இருந்து தற்போதைய சந்தை வேகம் தொடர்கிறது.