லெபனானில் தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்  

மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக போர் பதட்டம் அதிகரித்த வண்ணம் இருகிறது.
இந்த சூழலில் லெபனான் மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஒரு முழு வீச்சுப் போருக்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளது பலரையும் பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக நீடித்து வரும் இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் நடவடிக்கை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த திங்கள்கிழமை மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக இஸ்ரேல் உளவுத் துறை கண்டறிந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

You May Also Like

More From Author