இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் பலி  

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இரவு பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன் தலைவர் பாதுகாப்பாக உள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்த கூற்றுக்கு இது முரணாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு அறிக்கையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் நஸ்ரல்லாவைத் தவிர, ஹிஸ்புல்லாவின் தெற்கு முன்னணி என்று அழைக்கப்படும் தளபதி அலி கராக்கி, மற்ற அதிகாரிகளுடன் கொல்லப்பட்டதாகக் கூறியது.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லாவின் பிரதான தலைமையகத்தில் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார்.
இது ஹிஸ்புல்லாவின் கோட்டையாகும். இதற்கிடையே, இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் நஸ்ரல்லாவின் மகளும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், ஜைனப் நஸ்ரல்லாவின் மரணம் குறித்து இஸ்ரேலோ அல்லது லெபனானோ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author