சட்டவிரோதமாகப் பெறப்பட்ட தொல்பொருட்களைத் திருப்பி அளிக்கும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்

பிற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகப் பெறப்பட்ட தொல்பொருட்களைத் திருப்பி அளிக்கும் நடைமுறைகளை எளிதாக்கும் மசோதாவை பிரான்ஸ் நாடாளுமன்றம் சமீபத்தில் ஏற்றுகொண்டது. பல நாடுகளில் காணாமல் போன தொல்பொருட்களைத் திருப்பி அளிப்பது குறித்த இந்த மசோதா, பரந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் உலகெங்கிலும் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. சட்ட நிலையில் பிரான்ஸ் தனது காலனித்துவக் கொள்ளை வரலாற்றை ஏற்றுக்கொள்ளவும் சரிசெய்யவும் தொடங்கியுள்ளதை இம்மசோதா குறிக்கிறது என்று 67.6 விழுக்காட்டினர் தெரிவித்தனர். சட்டவிரோதமாகப் பெறப்பட்ட தொல்பொருட்களைத் திருப்பி அளிக்கும் நடைமுறைகளை எளிதாக்கிய கொள்கையை பிரான்ஸ் நாடாளுமன்றம் ஏற்றுகொண்டதற்கு 90.8 விழுக்காட்டினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், சர்வதேச சட்டக் கட்டமைப்பின் கீழ், மேலும் கட்டுப்பாட்டுடனும் செயல்படுத்தவும் கூடிய சர்வதேச விதிகளையும், கொள்ளையடிக்கப்பட்ட தொல்பொருட்களைத் திருப்பி அனுப்புவதற்கான அமைப்புமுறையையும் சர்வதேச சமூகம் உருவாக்க வேண்டும் என்றும் 96.5 விழுக்காட்டினர் வலியுறுத்தினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author