ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, அக்டோபர் 27ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக திங்கட்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தார்.
இஷிபா தனது கட்சியின் கீழ்சபை பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ளவும், ஊழலால் பாதிக்கப்பட்ட கட்சியில் தனது நிலையை உறுதிப்படுத்தவும் முயற்சிப்பதால், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, கடந்த வாரம் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைக்கான போட்டியில் இஷிபா வெற்றி பெற்ற நிலையில், செவ்வாயன்று நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற அமர்வின் போது ஜப்பானின் அடுத்த பிரதமராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
அவருக்கு முன்னர் பதவியில் இருந்த ஃபியூமியோ கிஷிடா தனது அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் ராஜினாமா செய்ததை அடுத்து ஷிகெரு இஷிபா கட்சியால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.