ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார், ரஃபாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) நடத்திய தாக்குதலின்போது கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வியாழக்கிழமை (அக்டோபர் 17) அறிவித்தது.
ஹமாஸ் படைகளுடனான மோதலின் போது பீரங்கி ஷெல் தாக்குதல் மூலம் சின்வார் கொல்லப்பட்ட நிலையில், அவரது மரணம் ஹமாஸ் அமைப்பிற்குள் தலைமைத்துவ வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது முன்னோடி இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பின்னர், கடந்த ஜூலை மாதம் ஹமாஸின் ஒட்டுமொத்த தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சின்வார், இஸ்ரேலுக்கு எதிரான தொடர்ச்சியான சண்டையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
அவர் கடந்த ஆண்டின் அக்டோபர் 7 தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்தார். இதன் விளைவாக 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பணயக்கைதிகளை ஹமாஸ் பிடித்தனர்.
யாஹ்யா சின்வாருக்கு பின் யார்? ஹமாஸின் தலைவருக்கான போட்டியில் அடிபடும் முக்கிய பெயர்கள்
