50க்கும் மேலான ஐ பி எஸ் அதிகாரிகள் இடமாற்றம்! – தமிழக அரசு உத்தரவு

Estimated read time 1 min read

தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், ஆயுதப்படை சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகப்பிரிவு ஏடிஜிபியாக பதவி வகித்துவந்த வெங்கடராமனுக்கு சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும், திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு டிஐஜி- ஆக பதவி உயர்வு வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா புதுக்கோட்டை எஸ்.பி.யாகவும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் அரியலூர் மாவட்ட எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author