தமிழ்மொழியை அனைவரும் கற்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

Estimated read time 1 min read

தமிழ்மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்றும், அதன் தொன்மையை உலகறிய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற 18-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, புலம்பெயர் இந்தியர்களுக்கான சிறப்பு சுற்றுலா ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகின் அறிவுசார் தேவையை நிறைவேற்றும் சக்தி இந்தியாவிடம் உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 21-ம் நூற்றாண்டில் இந்தியா அசுர வேகத்தில் முன்னேறி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

வெளிநாடுவாழ் இந்தியர்களை தாம் எப்போதும் இந்தியாவின் தூதர்களாக கருதுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author