தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்புவரை ஜீரோ இடை நிற்றல்: மத்திய அரசின் ஆய்வறிக்கை  

Estimated read time 1 min read

மத்திய பள்ளிக்கல்வித்துறை 2023-2024ம் கல்வியாண்டுக்கான ஆய்வறிக்கையை இந்த மாத துவக்கத்தில் வெளியிட்டது. அதில் பள்ளி இடைநிற்றல் விகிதம் தொடர்பான சில முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையில், நாம் பெருமைகொள்ளுவிதமாக தமிழ்நாட்டில் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எந்த வகுப்பிலும் இடைநிறுத்தல் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் தமிழ்நாட்டில் 7.68 ஆக உள்ளது. மேலும், உயர்கல்வியில் குறைந்த இடைநிறுத்தல் விகிதம் கொண்ட மாநிலங்களில் கேரளா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களுடன் தமிழ்நாடும் இணைந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author