மதுரை – போடி மின்சார ரயில் சேவை தொடக்கம்!

Estimated read time 1 min read

மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை  மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கியது.

மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை தினசரி வந்து செல்லும் பேசஞ்சர் ரயில் மற்றும் சென்னையில் இருந்து வாரத்திற்கு மூன்று நாள்கள் போடிநாயக்கனூருக்கு வந்து செல்லும் அதிவிரைவு ரயில் வண்டி இரண்டுமே ஒரே நாளில் மின்சார ரயிலாக மாற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் ரயில்வே இருப்புப் பாதைகளில் உள்ள மின்சார  கம்பங்களில் 25,000 ஓல்ட் மின்சாரம் செயல் திறன் நடைமுறையில் உள்ளதால் மின் கம்பிகளுக்கு இடையே இருப்புப் பாதைகளில் அத்துமீறி நுழைவோர்கள் மற்றும் சுற்றி திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு மீட்டர்கேஜ் ரயில் போக்குவரத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்பு சுமார் 436 கோடி ரூபாய் செலவில் அகல ரயில் இருப்புப் பாதையாக  மாற்றப்பட்டு  மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கும் போடிநாயக்கனூரில் இருந்து மதுரைக்கும் தினசரி பேசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் போடிநாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், திங்கள், புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள்சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து போடிநாயக்கனூர்க்கும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து வரும் வரையில் மதுரை மார்க்கம் வழியாக போடிநாயக்கனூர் வந்துடுகிறது. சென்னையில் இருந்து மதுரை வரை மின்சார ரயிலாக வரக்கூடிய அதி     விரைவு ரயில் வண்டி  மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை டீசல் இன்ஜின் ஆக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 40 நிமிடம் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை சீர் செய்யும் வகையில் போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வரை மின்சார அறையில் போக்குவரத்து தொடங்குவதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் விரைவில் மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு மின்சார ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு உண்டான பணிகள் சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய கட்டமாக கடந்த வியாழக்கிழமை போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வரை உள்ள மின்சார வழி தடக் கம்பிகளில் மின்சார ரயில் போக்குவரத்திற்கு  மின் தொடர்பு ஏற்படுத்தித் தரும்      பேன்டோகிராப் என்றழைக்கப்படக்கூடிய மின்தட இணைப்பு உபகரணம் பொருத்தப்பட்ட மின்தட இணைப்பு உபகரண ஆய்வு ரயில் சோதனை ஓட்டம் (OHE INSPECTION CAR )நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதன்முறையாக மின்சார ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் நடைபெற்ற ஓரிரு நாட்களிலேயே இன்று முதல் சென்னையில் இருந்து காட்பாடி நாமக்கல் சேலம்ஈரோடு கரூர் திண்டுக்கல் மதுரை வழியே வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படும் சென்னை அதிவிரைவு ரயில் மற்றும் மதுரையில் இருந்து தினசரி போடிநாயக்கனூருக்கு இயக்கப்படும் பேசஞ்சர் ரயில் ஆகிய இரண்டுமே ஒரே நாளில் மின்சார ரயிலாக மாற்றப்பட்டு பயணிகள் போக்குவரத்து தொடங்கியது. 110 கிலோ மீட்டர் வேகத்தில்  சோதனை செய்யப்பட்ட மின்சார ரயில் முதல் நாள் என்பதால் மதுரையில் இருந்து சுமார் 85 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author