ஹோலி பண்டிகை: இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ரயிலில் செல்லும் பயணிகளின் வசதிக்காக, இதுவரை 540 ரயில் சேவைகளை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

ஹோலி பண்டிகை காலத்தில், ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் நெரிசலைச் சமாளிக்கவும், இந்திய ரயில்வே சார்பில், 540 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

டெல்லி – பாட்னா, டெல்லி – பாகல்பூர், டெல்லி – முசாஃபர்பூர், டெல்லி – சஹர்சா, கோரக்பூர் – மும்பை, கொல்கத்தா – பூரி, கவுகாத்தி – ராஞ்சி, புதுடெல்லி – ஸ்ரீ  மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, ஜெய்ப்பூர் – பாந்த்ரா முனையம், புனே – தானாபூர், துர்க் – பாட்னா, பரானி – சூரத் போன்ற ரயில் பாதைகளில் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களை இணைக்க ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏறும் பயணிகளை ஒழுங்குப்படுத்துவதற்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர் மேற்பார்வை செய்யவுள்ளனர். வரிசையில் நின்று கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முக்கிய நிலையங்களில் கூடுதல் ரயில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ரயில்கள் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக முக்கிய நிலையங்களில் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே சார்பில், பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author