சீனத் துணை வெளியுறவு அமைச்சர் சுன் வெய்துங், இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் 27ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காசன் சந்திப்பின் போது, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டிய முக்கிய ஒத்த கருத்துகளை நடைமுறைப்படுத்துவதை முன்னேற்றி, இரு நாட்டுறவை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆய்வு செய்தனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் நாடாக பதவி ஏற்கும் சீனாவின் பணிக்கு இந்தியா ஆதரவு அளிக்கும். 2025ஆம் ஆண்டு அதாவது, சீன-இந்திய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், தொடர்புடைய மனிதப் பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சீனப் பெருநிலப்பகுதிக்கும் இந்தியாவுக்குமிடையிலான நேரடி விமான சேவையை மீட்கவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
இருதரப்பும், இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு பொது மக்களின் அடிப்படை நலனைக் கருத்தில் கொண்டு, நெடுநோக்கு மற்றும் நீண்டகால கோணங்களிலிருந்து, சீன-இந்திய உறவைக் கையாண்டு, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
படம்:CGTN