சீனத் தேசிய இரயில் குழுமத்தின் தகவலின்படி, ஜனவரி 28ம் நாள் நாடளவில் ரயில் மூலம் 77.6 இலட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ரயில் போக்குவரத்து பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் உள்ளது. இதனிடையில் இன்று சுமார் 55 இலட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பயணியர்களுக்கு வசதியளிக்கும் வகையில் கூடுதலாக 204 பயணியர் ரயில் வண்டிகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சீனப் பயணியர் விமானப் பணியகத்தின் தகவலின்படி, நேற்று 16 ஆயிரத்து 697 விமானங்கள் இயங்கின. இன்று 17ஆயிரத்து 181 விமானங்கள் இயங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வசந்த விழாவுக்கு முந்தைய 15 நாட்களில், சராசரியாக தினமும் 22.406 இலட்சம் விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது. 2024ம் ஆண்டு இருந்ததை விட 7.62 விழுக்காடு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.