சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் மார்ச் 28ஆம் நாள் வங்காளத்தேசத் தற்காலிக அரசின் முதன்மை ஆலோசகர் முகம்மது யூனுஸைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், வங்காளத்தேசத்துடன் இணைந்து பாடுபட்டு, இரு நாட்டு ஒத்துழைப்பைப் புதிய கட்டத்தில் காலடியெடுத்து வைத்து, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய சீனா விரும்புகின்றது.
மேலும் வங்காளத்தேசத்துடன் இணைந்து ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை உயர் தரமுடன் கூட்டாகக் கட்டியமைத்து, எண்ணியல் பொருளாதாரம், தூய்மையான பொருளாதாரம், கடல்சார் பொருளாதாரம், அடிப்படை வசதிகளின் கட்டுமானம் முதலியவற்றில் ஒத்துழைப்பை விரிவாக்கச் சீனா விரும்புகின்றது என்றார்.
சீனா வங்காளத்தேசத்தின் நம்பகமான பங்காளி மற்றும் நண்பர் எனக் குறிப்பிட்ட யூனுஸ் ஒரே சீனா என்ற கோட்பாட்டை வங்காளத்தேசம் உறுதியாக ஆதரித்து, தைவான் சுதந்திரத்தை எதிர்க்கின்றது என்று தெரிவித்தார்.
மேலும், சீனாவுடன் இணைந்து இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவு பெரிய வளர்ச்சியைப் பெறுவதைக் கூட்டாக முன்னேற்ற வங்காளத்தேசம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.