ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை மேற்கொண்ட இந்திய ராணுவத்திற்கு இந்திய ராணுவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது இந்திய விமானங்களை தாக்க வந்த பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீவிரவாத முகாம்களை நோக்கி இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்து தாக்குதலை மேற்கொண்ட இந்திய ராணுவத்திற்கு இந்திய ராணுவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அமித் ஷா, பயங்கரவாதத்தை அதன் வேர்களில் இருந்து ஒழிக்க இந்தியா உறுதியாக உள்ளது. அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி தான் `ஆபரேஷன் சிந்தூர். இந்தியா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி
கொடுக்க மோடி அரசாங்கம் உறுதியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.