ஜம்மு காஷ்மீரில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் தனது பங்கை ஒப்புக்கொண்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (மே 9) ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது பாகிஸ்தான் ஏர் வைஸ் மார்ஷல் ஔரங்கசீப் அகமது இந்த ஒப்புதலை அளித்தார்.
ஒரு மூத்த பாகிஸ்தான் அதிகாரி இந்த கொடிய தாக்குதலில் நாட்டின் பங்கை வெளிப்படையாக ஒப்புக் கொள்வது இதுவே முதல்முறையாகும்.
பாகிஸ்தான் பல வருடமாக அதிகாரப்பூர்வமாக இதை மறுத்து வந்த நிலையில், இயக்குநர் ஜெனரல் ஐஎஸ்பிஆர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி மற்றும் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஆகியோருடன் பேசிய அகமது, புல்வாமா தாக்குதலை தந்திரோபாய புத்திசாலித்தன நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.
‘2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்’: பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம்
