பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தின் ஹைலைட்ஸ்  

1991இல் உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவரின் முதல் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) உக்ரைனுக்கு மேற்கொண்ட பயணம் அமைந்தது.

ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் வரும் இந்த பயணம், இந்திய மற்றும் உக்ரைன் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியுடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது, இரு தலைவர்களும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நான்கு முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தங்கள் விவசாயம், உணவுத் தொழில், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வழங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author