ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை வெளியிட்ட எக்ஸ் தள பதிவு  

Estimated read time 0 min read

சனிக்கிழமை (மே 10) இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த அறிவிப்பு வெளியான நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருவதாக இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.
எக்ஸ் தளத்தில் இதுகுறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், அதன் பணிகள் தேசிய நோக்கங்களுக்கு ஏற்ப துல்லியம் மற்றும் தொழில்முறையுடன் செயல்படுத்தப்பட்டதாக ஐஏஎஃப் குறிப்பிட்டது.
நடவடிக்கைகள் விவேகமான முறையில் நடத்தப்பட்டன என்றும், மேலும் உரிய நேரத்தில் விரிவான விளக்கம் கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளது.
அதே நேரம், நடவடிக்கைகள் இன்னும் தொடரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் ஊகங்களைத் தவிர்க்கவும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும் வலியுறுத்தி உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author