2ஆவது உலகப் போர் வரலாற்றுப் பாடத்தைப் படித்தல்

2025ஆம் ஆண்டு, சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆண்டு ஆகும். இந்த ஆண்டு, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்கள் எதிர்ப்புப் போர், சோவியத் ஒன்றியத்தின் பெரும் தேசபக்திப் போர் மற்றும் உலக பாசிசவாத எதிர்ப்புப் போர் ஆகியவற்றின் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவையும், ஐ.நா.நிறுவப்பட்ட 80ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது. 80ஆவது ஆண்டு நிறைவுகளின் சிறப்பு முனைக்களில் நின்று, மக்கள் வரலாற்றைத் திரும்பி பார்த்து, தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்து, எதிர்காலத்தை பற்றி சிந்திக்கத் தூண்டியுள்ளது.

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்கள் எதிர்ப்புப் போரில், சீனாவைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் வீரர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 3கோடியே 50இலட்சத்தை தாண்டியது. இது, 2ஆவது உலகப் போரில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு தொகையில் மூன்றில் ஒரு பகுதியை வகித்துள்ளதாக கணக்கிடப்பட்டது. ஐரோப்பிய போர்க்களத்தில், ஸ்டாலின்கிராட் போர், 2ஆவது உலகப் போருக்கான ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் ரஷியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, சோவியத் ஒன்றியத்தின் மாபெரும் தேசபக்த போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பங்கெடுத்தார். வரலாற்றை மறந்துவிடக் கூடாது, அமைதி என்பது கடினமாக வெல்லப்பட்டது என்ற ஒரு தெளிவான தகவலை உலகிற்கு அனுப்பியதை இப்பயணம் குறிக்கிறது.

ஒரு கண்ணாடி போல வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்கிறோம் என்ற சீன பழமொழி உண்டு. தப்பெண்ணம் மற்றும் பாகுபாடு, வெறுப்பு மற்றும் போர் ஆகியவை பேரழிவையும் துன்பத்தையும் மட்டுமே கொண்டு வரும், பரஸ்பர மரியாதை, சமமான சகவாழ்வு, அமைதியான வளர்ச்சி மற்றும் கூட்டுச் செழிப்பு ஆகியவை மனிதகுலத்திற்கான சரியான பாதை என்று 2ஆவது உலகப் போரின் வேதனையான பாடங்கள் மக்களுக்கு உணர்த்துகின்றது.

80 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2ஆவது உலகப் போரின் வெற்றியைப் பாதுகாக்கவும், 2ஆவது உலகப் போரின் வரலாறு பற்றிய சரியான பார்வையை ஊக்குவிக்கவும் மக்கள் விரும்புவதற்கான காரணம், துயரங்கள் மீண்டும் நிகழாமல் தவிர்த்து, அருமையான எதிர்காலத்தை உருவாக்குவது ஆகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author