குன்னூரில் பெய்த கனமழை காரணமாக, கடந்த 18-ந் தேதி இரவு மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை 16 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
மேலும் தண்டவாளத்தில் மரங்கள், பாறைகள் விழுந்தன. இதனால் தண்டவாளங்கள் சேதமடைந்தது. இதனால் கடந்த 5 நாட்களாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. பணிகளை விரைந்து முடித்து, மலை ரெயில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை ரெயில்வே துறையினர் மேற்கொண்டனர்.
அதன்படி, கனமழையால் 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இயற்கையின் அழகினை ரசித்தபடி சுற்றுலா பயணிகள் ரெயிலில் பயணித்தனர். குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 5 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது [மேலும்…]
ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான புகழ்பெற்ற சூரசம்ஹாரம் சடங்கு, திங்கட்கிழமை (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள [மேலும்…]
காக்கிநாடாவில் கடக்கும் மோந்தா புயல் காரணமாக புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் மூன்று நாட்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளும் நிவாரண [மேலும்…]
அண்டை நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் பதட்டங்களைக் குறைக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தங்கள் முக்கியமான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையை சனிக்கிழமை (அக்டோபர் 25) [மேலும்…]
பத்து நாட்களுக்குப் பிறகு குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை [மேலும்…]
பொதுவாக கீரை வகைகளில் நமக்கு தேவையான விட்டமின்களும் தாதுக்களும் நிரம்பியுள்ளது .இந்த கீரை வகைகளில் நமக்கு தேவையான இரும்பு சத்து ,கால்சியம் சத்து ,மற்றும் [மேலும்…]
2025 குறுவை நெல் சாகுபடிக்கான கொள்முதல் எதிர்பார்த்ததை விட 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது என்பது புள்ளி விவரங்களின் படி தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டம் [மேலும்…]