குன்னூரில் பெய்த கனமழை காரணமாக, கடந்த 18-ந் தேதி இரவு மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை 16 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
மேலும் தண்டவாளத்தில் மரங்கள், பாறைகள் விழுந்தன. இதனால் தண்டவாளங்கள் சேதமடைந்தது. இதனால் கடந்த 5 நாட்களாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. பணிகளை விரைந்து முடித்து, மலை ரெயில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை ரெயில்வே துறையினர் மேற்கொண்டனர்.
அதன்படி, கனமழையால் 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இயற்கையின் அழகினை ரசித்தபடி சுற்றுலா பயணிகள் ரெயிலில் பயணித்தனர். குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 5 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய அஞ்சல் துறை (India Post) தனது வாடிக்கையாளர்கள் கடிதங்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பார்சல்களை அனுப்புவதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. வரும் [மேலும்…]
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை [மேலும்…]
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பெயரை மாற்றம் செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற திட்டம் [மேலும்…]
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு இடையே, பொதுமக்கள் நடத்திய பேரணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது [மேலும்…]
Gen Z இளைஞர்களை பலர் தவறாக வழிநடத்துகிறார்கள். டெல்லிக்கும், இங்குள்ள இளைஞர்களுக்கும் வித்தியாசம் உள்ளதாக ஆளுநர் அர்லேகர் கூறியுள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் [மேலும்…]
டெல்லி : சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோ ஃபேஸ்புக் (Facebook) தளத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட விவகாரமானது [மேலும்…]
5,105 செயற்கைக்கோள்களை கொண்ட ஒரு புதிய வலையமைப்பை இயக்குவதற்காக, அமேசான் நிறுவனம் கூட்டாட்சித் தொலைத்தொடர்பு ஆணையத்திடம் (FCC) ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது. கைபேசி இணைப்பு [மேலும்…]
பல நாடுகளின் செய்திஊடகங்கள் அண்மையில் தொடர்ந்து வெளியிட்ட செய்திகளின் படி, திறந்த மூலநிரல் மாதிரிகள், அறிவியல் தொழில் நுட்பப் பயன்பாடு மற்றும் திறன் கட்டுமானம் [மேலும்…]