குன்னூரில் பெய்த கனமழை காரணமாக, கடந்த 18-ந் தேதி இரவு மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை 16 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
மேலும் தண்டவாளத்தில் மரங்கள், பாறைகள் விழுந்தன. இதனால் தண்டவாளங்கள் சேதமடைந்தது. இதனால் கடந்த 5 நாட்களாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. பணிகளை விரைந்து முடித்து, மலை ரெயில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை ரெயில்வே துறையினர் மேற்கொண்டனர்.
அதன்படி, கனமழையால் 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இயற்கையின் அழகினை ரசித்தபடி சுற்றுலா பயணிகள் ரெயிலில் பயணித்தனர். குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 5 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இடைத்தேர்தலில் தவெக அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டுள்ளனர். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தொகுதியில் ஆளும் கட்சிக்கு [மேலும்…]
சீனத் துணை தலைமையமைச்சர் டிங் சுயேசியாங் 16ஆம் நாள் முற்பகல் குவாங்சியின் சின்சோ நகரில் நடைபெற்ற பிங்லு கால்வாயின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். இக்கால்வாய் [மேலும்…]
உலக அரங்கில் பெரும் செல்வாக்கை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்று, ரஷ்ய அதிபர் புதின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ரஷ்யா [மேலும்…]
சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு ஹாங்காங்கின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான முதலாவது ஐந்தாண்டு திட்டத்தை(2026-2030) 16ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. [மேலும்…]
மேம்பட்ட உற்பத்தித் தொழிலை முன்னெடுப்பது குறித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் முக்கிய உத்தரவைப் [மேலும்…]
பண்பாட்டு மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தைச் சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் [மேலும்…]
நவ சீனா நிறுவப்பட்ட பிறகு ஆறு மற்றும் கடல் வழிப் போக்குவரத்தை இணைக்கும் முதலாவது கால்வாயான பிங்லு கால்வாய், செப்டம்பர் 16ஆம் நாள், அதிகாரப்பூர்வமாக [மேலும்…]
சர்வதேச அளவில் பதற்றமும், மோதல்களும் நிறைந்துள்ள சூழலில், ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைப்பாடுகள் கவலை அளிப்பதாக உள்ளன. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் நடத்திய [மேலும்…]