குன்னூரில் பெய்த கனமழை காரணமாக, கடந்த 18-ந் தேதி இரவு மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை 16 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
மேலும் தண்டவாளத்தில் மரங்கள், பாறைகள் விழுந்தன. இதனால் தண்டவாளங்கள் சேதமடைந்தது. இதனால் கடந்த 5 நாட்களாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. பணிகளை விரைந்து முடித்து, மலை ரெயில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை ரெயில்வே துறையினர் மேற்கொண்டனர்.
அதன்படி, கனமழையால் 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இயற்கையின் அழகினை ரசித்தபடி சுற்றுலா பயணிகள் ரெயிலில் பயணித்தனர். குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 5 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈவெரா, அண்ணா, சங்கரலிங்கனார் ஆகியோர் வருவதற்கு முன்பே தமிழ்நாட்டிற்கு அப்பெயரை வைத்தவர் பாரதியார் என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை [மேலும்…]
சென்னையில் 23வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் திரையரங்கத்தில் INDO CINE APPRECIATION FOUNDATION சார்பில் தமிழக அரசின் [மேலும்…]
இந்திய அரசியலில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்த மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவருமான சிவராஜ் பாட்டீல், வெள்ளிக்கிழமை (டிசம்பர் [மேலும்…]
பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் [மேலும்…]
ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. பஸ் [மேலும்…]
சீனா மத்திய பொருளாதாரப் பணிக் கூட்டம் டிசம்பர் 10、11ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத்தலைவரும் [மேலும்…]
கார்த்தி மற்றும் கிருத்தி ஷெட்டி நடித்த, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படமான ‘வா வாத்தியார்’ படத்தின் வெளியீடு, திருப்பிச் செலுத்தப்படாத கடன்கள் தொடர்பான சென்னை [மேலும்…]