குன்னூரில் பெய்த கனமழை காரணமாக, கடந்த 18-ந் தேதி இரவு மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை 16 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
மேலும் தண்டவாளத்தில் மரங்கள், பாறைகள் விழுந்தன. இதனால் தண்டவாளங்கள் சேதமடைந்தது. இதனால் கடந்த 5 நாட்களாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. பணிகளை விரைந்து முடித்து, மலை ரெயில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை ரெயில்வே துறையினர் மேற்கொண்டனர்.
அதன்படி, கனமழையால் 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இயற்கையின் அழகினை ரசித்தபடி சுற்றுலா பயணிகள் ரெயிலில் பயணித்தனர். குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 5 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய பங்குச் சந்தையில் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்று (ஜூன் 11) பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகளின் பலவீனம் [மேலும்…]
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்பி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்குவங்க சட்டசபை தேர்தல் தோல்வியால் முன்னாள் முதலமைச்சர் மம்தா [மேலும்…]
தமிழக முதல்வர் விஜய் அரசுமுறை பயணமாக டெல்லி செல்லவிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவர் தனி விமானத்தில் சொகுசு பயணம் மேற்கொள்வதாக கடுமையான விமர்சனங்கள் [மேலும்…]
சென்னை : தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை நீடிப்பதற்கான [மேலும்…]
கேரளா : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கடுமையான மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. [மேலும்…]
முதல்வர் விஜயின் CMIUTM திட்டத்தின் மூலம், தமிழக நகரங்களின் குடிநீர், கழிவுநீர், சாலை, பூங்கா மற்றும் நதிகள் மறுசீரமைப்புக்கு முதல் கட்டமாக மத்திய அரசின் [மேலும்…]