புதிய யுகத்தில் சீனாவின் தேசியப் பாதுகாப்பு பற்றிய வெள்ளையறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் மே 12ஆம் நாள் வெளியிட்டது. புதிய யுகத்தில் சீனத் தேசியப் பாதுகாப்பு பணி பற்றிய புத்தாக்க கருத்து, நடைமுறை மற்றும் சாதனைகள் ஆகியவை இதில் பன்முகங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளன. முன்னுரை மற்றும் இறுதி உரையைத் தவிர, இந்த வெள்ளையறிக்கையில் 6 பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
சொந்த பாதுகாப்பையும் பொது பாதுகாப்பையும் சீனா ஒன்றிணைத்து, உலகப் பாதுகாப்பு மேலாண்மையை வலுப்படுத்த வேண்டும் என்று கருதுகிறது. உண்மையான பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று, உலகப் பாதுகாப்பு மேலாண்மை முறையை மேலும் நியாயமான திசையை நோக்கி பயணிப்பதை விரைவுபடுத்தியுள்ளது என்று இந்த வெள்ளையறிக்கையில் சுட்டக்காட்டப்பட்டுள்ளது.