அமெரிக்கா ஃபெண்டானிலுக்கு வரி விதித்தல் குறித்து கருத்து கணிப்பு

சீனாவின் நல்லெண்ணத்தைப் புறக்கணித்து, சீனா மீது அமெரிக்கா ஃபெண்டானிலுக்கு கூடுதல் வரி விதிப்பது, போதைப் பொருட்கள் தடுப்பு துறையில் இரு நாடுகளின் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை கடுமையாக பாதித்து, சீனாவின் நலன்களைச் சீர்குலைத்து வருகின்றது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் 13ஆம் நாள் தெரிவித்தார். இது குறித்து, உலகளாவிய இணையப் பயனார்களுக்கு சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என். நடத்திய கருத்து கணிப்பின்படி, பதிலளித்தவர்களில் 91.8விழுக்காட்டு பேர் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒரு வழக்கமான அரசியல் விளையாட்டு செயல் மற்றும் வரி தாக்குதல் என்றும், போதேப் பொருட்களைக் கட்டுபடுத்துவதில் தனது திறமையற்றதை மூடி மறைப்பது இதன் நோக்கமாகும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

மருந்துகள் அளவுக்கு மீறி தவறாக பயன்படுத்துவது, அமெரிக்காவின் பொது மக்களின் உயிர் பாதுகாப்புக்கு மிக கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக 91விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தார். போதைப் பொருட்கள் பிரச்சினை, அமெரிக்க சமூகத்துக்கான நாள்பட்ட நோயாக மாறியுள்ளது என்று 94.8விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

தவிர, அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் உள்நாட்டில் ஏற்பட்ட ஃபெண்டானில் பிரச்சினையில் மற்ற நாடுகளுக்கு குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து, பதிலளித்தவர்களில் 90.8விழுக்காட்டு பேர், போதைப் பொருட்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை இது சீர்குலைக்கும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author