டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தை மறு ஆய்வு செய்வதற்கான முக்கிய கூட்டம் நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அங்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சுற்றுலாவை நம்பி பிழைப்பு நடத்தியவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றுள்ள கூட்டத்தின் மூலம், மீண்டும் சுற்றுலாத்துறை உயிர்பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.