கரோனா வைரஸ் தோற்றம் பற்றி, அமெரிக்கா 78வது உலகச் சுகாதார பேரவையில் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டது குறித்து, ஜெனீவாவிலுள்ள சீன நிரந்தரப் பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மே 20ஆம் நாள் கூறுகையில், கரோனா வைரஸ் பரவிய பிறகு, தொடர்புடைய தகவல்கள் மற்றும் மரபணு வரிசைகளைப் சீனா உடனடியாக சர்வதேச சமூகத்துடன் பகிர்ந்து கொண்டு, உலக சுகாதார அமைப்புக்கும், அமெரிக்கா உள்ளிட்ட 153 நாடுகளுக்கும் பொருட்கள் மற்றும் நிதியுதவி அளித்துள்ளது. மனித குலத்தின் கூட்டு நலன்களைப் பேணிக்காப்பதற்கான சீனாவின் பொறுப்பை இது காட்டியுள்ளது என்றார்.
மேலும், ஆரம்ப காலத்திலுள்ள கரோனா வைரஸ் தொற்று நோய் பற்றிய தகவல்களை அமெரிக்கா உலக சுகாதார அமைப்புடன் முன்முயற்சியுடன் பகிர்ந்து கொண்டு, ஃபோர்ட் டெட்ரிக் உள்ளிட்ட உலகத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட உயிரியல் ஆய்வகங்களின் நிலைமைகளை வெளியிட வேண்டும் என்றும், கரோனா வைரஸ் தோற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை அரசியல் மயமாக்குவதையும், சர்வதேச அமைப்புகளுக்கு நிர்ப்பந்தம் அளிப்பதையும் நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.