8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: IMD  

Estimated read time 1 min read

கேரளாவில் பருவமழை துவங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு 8 நாட்கள் முன்னதாகவே தொடங்குவது கடந்த 16 ஆண்டுகளில் முதல்முறையாகும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் முன்னேறி வரும் பருவமழை அமைப்பு ஆகியவற்றின் கலவையால், கடந்த இரண்டு நாட்களாக கேரளாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து IMD வெளியிட்ட X பதிவில், “கடந்த 2009 ஆம் ஆண்டு, மே 23, அன்று கேரளாவில் முன்கூட்டியே பருவமழை பெய்யத் தொடங்கிய பிறகு, இதுவே சீக்கிரமாக கேரளாவில் பருவமழை தொடங்கும் தேதியாகும்” எனத்தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author