ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது 

ஆறு இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற ஈரானிய மீன்பிடிக் கப்பலை கேரளக் கடற்கரையில் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்ததாக இந்திய கடலோரக் காவல்படை இன்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்களான ஆறு பேரும் ஈரானிய ஸ்பான்சரான சையத் சவுத் அன்சாரி என்பவருக்கு கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தவர்கள் ஆவர்.
ஆரம்ப விசாரணையின்படி, அந்த ஈரானிய ஸ்பான்சர் தமிழ் மீனவர்களை மோசமாக நடத்தியதாகவும், அவர்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சையத் சவுத் அன்சாரி, தங்கள் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்து வைத்துக்கொண்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

You May Also Like

More From Author