ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப்  

Estimated read time 0 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி கட்டண அச்சுறுத்தலை விடுத்திருந்தார்.
இந்தியா மட்டுமல்ல, வேறு எந்த நாட்டிலும் உற்பத்தி செய்யக்கூடாது என டிம் குக்கிற்கு அவர் கூறியிருந்தார்.
அடுத்த விசித்திரமான நடவடிக்கையாக இதே போன்றதொரு அச்சுறுத்தலை ஆப்பிளின் போட்டியாளரான சாம்சங்கிற்கும் டிரம்ப் இப்போது வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தென் கொரிய நிறுவனமான சாம்சங்கின் தொலைபேசிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்படாவிட்டால் 25% இறக்குமதி வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவில் சாதனங்களை விற்பனை செய்யும் எந்தவொரு தொலைபேசி உற்பத்தியாளருக்கும் இந்த வரி பொருந்தும் என்றார்.

You May Also Like

More From Author