“முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை”… 18 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜை

Estimated read time 0 min read

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள முருக பெருமான் சன்னதியில் வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பல பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

நேற்று 18 வகையான பொருட்களால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்ற நிலையில் பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த முருகப்பெருமானை பக்தர்கள் பக்தி பரவசத்தோடு வணங்கி மகிழ்ந்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் இதேபோன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் ஏராளமான மக்கள் அந்தந்த பகுதிகளில் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author