டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.கவை சேர்ந்த பிரவேஷ் வஹி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரோஹினி கிழக்கு வார்டிலிருந்து 3 முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக 156 வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹசி ஸராஃபுக்கு வெறும் 9 வாக்குகளே கிடைத்தன. துணை மேயராக பாஜ.கவை சேர்ந்த மோனிகா பன்ட் தேர்வாகியுள்ளார்.
பாஜகவை சேர்ந்த ஜெய்பகவன் யாதவ், மனீஷ் சத்தா மற்றும் ஆம் ஆத்மியை சேர்ந்த ஜலஜ் சவுத்ரி ஆகியோர் நிலைக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
