பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் பாலம், ஒரு பொறியியல் அற்புதம் என்று பாராட்டப்படுகிறது.
ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் – பாரிஸின் சின்னமான ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரத்தில் – நிற்கும் இந்தப் பாலம், 272 கி.மீ நீளமுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இதன் கட்டுமானத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில் டாக்டர் ஜி மாதபி லதாவும் ஒருவர்.
பெங்களூருவைச் சேர்ந்த பேராசிரியர் இவர், புவி தொழில்நுட்ப ஆலோசகராக இந்த திட்டத்திற்காக 17 ஆண்டுகள் அர்ப்பணித்துள்ளார்.
ஜம்முவின் சின்னமான செனாப் ரயில்வே பாலத்தின் பின்புலமான பொறியாளர் இவர்தான்!
