இந்தியா கடந்த பத்து ஆண்டுகளில் எரிசக்தித் துறையில் உலகம் வியக்கும் அளவிலான ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
2014 ஆம் ஆண்டு வெறும் 3 ஜிகாவாட்டாக இருந்த இந்தியாவின் சோலார் மாட்யூல் உற்பத்தித் திறன், தற்போது 172 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது.
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இந்த மைல்கல் சாதனையை உறுதிப்படுத்தினார்.
இறக்குமதியை சார்ந்திருந்த ஒரு நாடு, இன்று உலகளாவிய அளவில் சூரியசக்தி உற்பத்தியில் முன்னிலை வகிப்பது ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
10 ஆண்டுகளில் 3 ஜிகாவாட்டிலிருந்து 172 ஜிகாவாட்டாக இந்தியாவின் சூரியசக்தி உற்பத்தி உயர்வு
