24ஆவது“சீன மொழி பாலம்” எனும் உலக பல்கலைக்கழக மாணவர்கள் போட்டி மற்றும் 18ஆவது உலக நடுத்தரப் பள்ளி மாணவர்கள் போட்டிக்கான இந்தியாவின் இறுதி போட்டியும் பரிசளிப்பு விழாவும் ஜூன் 8ஆம் நாள், கொல்கத்தாவில் நடைபெற்றது.நாம்
இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபிஹோங், கொல்கத்தாவில் இந்தியாவுக்கான துணை தூதர் சூ வெய் முதலியோர் இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர்.
இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளின் வேந்தர்கள், மாணவர்கள், இந்தியாவில் வசிக்கும் சீனர்கள் உள்ளிட்ட 200க்கும் மேலான விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
சீனத் தூதர் சூ ஃபி ஹோங் இதில் கூறுகையில்,
சீனாவும் இந்தியாவும் அண்டை நாடுகளாகவும் உலகிலேயே பழம் பெறும் நாகரிகச் சிறப்பு வாய்ந்த நாடுகளாகவும் விளங்குகின்றன. கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகாலத்தில், இரு நாடுகள் ஒன்றை ஒன்று படித்துக் கொண்டு, பரஸ்பரம் செல்வாக்குகளை ஏற்படுத்தி வந்துள்ளன. மொழித் துறையில் இரு நாடுகள் பரிமாற்றம் செய்யும் வழக்கமும் உள்ளது. அதே வேளையில், மனித குலத்தின் நாகரிக முன்னேற்றத்தைக் கூட்டாக இரு தரப்பும் முன்னெடுத்துள்ளன. தற்போது, சீன-இந்திய உறவு வளர்ச்சியை மேம்பாட்டிற்கான முக்கியமான காலக் கட்டத்தில் உள்ளது. இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கியமான ஒத்த கருத்துகள், இரு தரப்பு உறவு வளர்ச்சிக்கு திசை வழிகாட்டியாக அமைந்துள்ளன.
“சீன மொழி பாலம்”போட்டி, இரு நாடுகளின் மனித பண்பாட்டுப் பரிமாற்றங்களை விரைவுபடுத்தி, சீன-இந்திய உறவுகளை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க ஆக்கப்பூர்வமான முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும், இந்திய இளைஞர்களுக்கான சீனாவில் சுற்றுப் பயணக் குழுவிற்கு சூ ஃபிஹோங் கொடியை வழங்கினார்.