பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 15 அன்று சைப்ரஸ் குடியரசு, கனடா மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சைப்ரஸுக்கு சென்ற பிறகு, ஜூன் 16 ஆம் தேதி மாலைக்குள் மோடி கனடாவுக்கு செல்வார்.
கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், ஜூன் 16-17 தேதிகளில் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி கனடாவில் உள்ள கனனாஸ்கிஸுக்குச் செல்வார்.
G7- உலகின் முன்னேறிய பொருளாதாரங்களில் ஏழு நாடுகளைக் கொண்டுள்ளது – கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்.
பஹல்கம் தாக்குதல் மற்றும் அதை தொடர்ந்து நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று கனடா செல்கிறார்
