பூட்டானுக்குப் பிரதமர் மோடி இரண்டு நாள் அரச முறைப் பயணம்  

Estimated read time 1 min read

இந்தியாவுக்கும், இமயமலை நாடான பூட்டானுக்கும் இடையேயான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பூட்டானுக்கு அரச முறைப் பயணம் மேற்கொள்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மோடி பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் அவர்களைச் சந்தித்துப் பேச உள்ளார்.
மேலும், பிரதமர் மோடியும், மன்னரும் இணைந்து, இந்தியா-பூட்டான் கூட்டுறவின் முக்கிய மைல்கல்லாக விளங்கும் 1020 மெகாவாட் புனாட்சங்சு II நீர்மின் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளனர்.
அத்துடன், மன்னரின் தந்தையும் நான்காவது மன்னருமான ஜிக்மே சிங்கே வாங்சுக்கின் 70வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author