நாளை விண்வெளிக்கு பயணமாகிறார் சுபன்ஷு ஷுக்லா  

Estimated read time 1 min read

பல தாமதங்களுக்குப் பிறகு, இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை ஏற்றிச் செல்லும் AX -4 பணி ஜூன் 25 அன்று தொடங்கப்படும் என்று நாசா செவ்வாயன்று அறிவித்தது.
முன்னதாக ஜூன் 22 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தனியார் பயணம் ஏழாவது முறையாக ஒத்திவைத்த பிறகு நாசாவின் இந்த லேட்டஸ்ட் அறிவிப்பு வந்துள்ளது.
ஆரம்பத்தில் மே 29 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த Ax-4 பணியின் ஏவுதல், தொழில்நுட்ப சிக்கல்கள், வானிலை மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில்(ISS) ஏற்பட்ட கசிவுகள் காரணமாக மீண்டும் மீண்டும் தாமதமாகி வருகிறது.
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை புதன்கிழமை மதியம் 12:01 மணிக்கு (இந்திய நேரப்படி) இந்த பணியைத் தொடங்க இலக்கு வைத்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author