தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தின் தேஹோங் மாவட்டத்தில், கிராமப்புற மறுமலர்ச்சியை ஊக்குவிக்கும் சிறுபான்மை இன கலாசாரமும், புதிய உயிர்ச்சக்தியைப் பெற்றுள்ள எல்லை நுழைவாயில்களும் சீனா-மியான்மர் எல்லைப்பகுதியின் வளமான வளர்ச்சிக்கு இணைந்து வழிவகுக்கின்றன.
டெஹோங் சோவின் சுடோங்குவா கிராமத்தில் உள்ள தேஆங் இனத்தின் புளிப்பு தேநீர் மற்றும் ப்ரோகேட் நெசவு நுட்பம், “அருவமான கலாசார பாரம்பரியம் மற்றும் சுற்றுலா” ஒருங்கிணையும் மேம்பாட்டு மாதிரிசயின் கீழ், சிறுபான்மை கலாசாரத்தை பாதுகாத்து வருவதோடு, கிராமப்புற சுற்றுலாவின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றது. 2024ஆம் ஆண்டில், இக்கிராமம் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, 30 கோடி யுவானுக்கு மேல் வருவாயை ஈட்டியுள்ளது.
மியான்மருடன் ஒரு நதியால் பிரிக்கப்படும் வாண்டிங் மாவட்டம், தற்போது யுன்னான் மற்றும் மியான்மரை இணைக்கும் முக்கிய வர்த்தகப் பாதையாகும். இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை, வாண்டிங் நுழைவாயில் மூலமான பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அளவு 513,300 டன்களை எட்டியது. இதன் மதிப்பு 1.27 பில்லியன் யுவான் ஆகும்.
2024ஆம் ஆண்டில் சீனா-மியான்மர் எல்லையில் உள்ள மிகப்பெரிய தரை நுழைவாயிலான ருய்லி நுழைவாயில் மூலம், சுமார் 5.33 மில்லியன் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.இது 2023ஆம் ஆண்டை விட 49.78 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.