2023ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை குறித்த சர்வதேச ஒத்துழைப்புக்கான உச்சி மன்றக் கூட்டத்தில், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஆட்சிமுறை பற்றிய முன்மொழிவுகளை சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்தார். வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் ஆட்சிமுறை என மூன்று துறைகளில், பல்வேறு தரப்புகளால் பொதுவாக கவனம் செலுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மற்றும் ஆட்சிமுறை விஷயத்துக்கு செயலாக்கம் வாய்ந்த கருத்துகளும் தீர்வுத் திட்டமும் இந்த முன்மொழிவுகளில் அறிமுகம் செய்யப்பட்டன.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஆட்சிமுறை பற்றிய முன்மொழிவுகளில் இடம்பெற்றுள்ள விபரங்கள்:
முதலில், “மக்களே முதன்மை” என்ற ஆட்சிமுறை கருத்தை சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் இந்த முன்மொழிவுகளில் முன்வைத்தார். ஏஐ தொழில் நுட்பத்தை கருவியாக்குதல் மற்றும் ஆயுதமாக்குதல் போன்ற செயல்களை அவர் விமர்சித்தார். அதேவேளையில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமானது, மனித குலத்தின் பொது நலன்களை சேவை செய்ய வேண்டும், சமூகப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும், மனித குலத்தின் உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்ற கருத்துகளை அவர் முன்வைத்தார். தவிர, சீனப் பாரம்பரிய கல்வியில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும், மனிதர்களின் உள்ளார்ந்த இயல்பே நன்மை தான் என்ற சிந்தனையை, உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஆட்சிமுறைத் துறையில் அவர் கொண்டு வந்து, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை நன்மைக்காக வழிகாட்ட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். மனித குலத்தின் நாகரிகத்தை முன்னேற்றும் நோக்கில் செயற்கை நுண்ணிறவு தொழில் நுட்பம் எப்பொதும் உதவி செய்ய வேண்டியது அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், பல்வேறு நாடுகளுக்கும் செயற்கை நுண்ணிறவு தொழில் நுட்ப வளர்ச்சி துறையில் உரிமைகள் வாய்ப்புகள் மற்றும் விதிமுறைகள் சமம் என்பதில் ஊன்றி நிற்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். குறிப்பாக, வளர்ந்து வரும் நாடுகளின் பிரதிநிதித்துவம் மற்றும் பேச்சு உரிமையை அதிகரிக்க வேண்டும் என்றும், சர்வதேச ஒத்துழைப்பு மூலம் தொழில் நுட்ப இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.
மேலும், தொழில் நுட்ப புத்தாக்கம், இடர்பாடுகளுக்கான தடுப்பு மற்றும் கட்டுபாடு ஆகியவற்றுக்கும் இடையே சரியான சமநிலையைப் பராமரிப்பது தொடர்பாக இந்த முன்மொழிவுகளில் ஷிச்சின்பிங் தனது கருத்தை முன்வைத்தார்.