தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது..!!

Estimated read time 0 min read

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ75 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

உலகளவில் தங்கம் சிறந்த சேமிப்பாகவும், சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கேற்ப தங்கம் விலையும் அதிரடியாக ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. சென்னையில் கடந்த ஆக 21 தங்க விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.73,840க்கும், கிராம் ரூ. 9,230க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் ஆக.22 ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.73,840க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,215க்கு விற்பனையானது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

தொடர்ந்து ஆக. 23 அன்று சென்னையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் மீண்டும் 74 ஆயிரத்தை தாண்டி ஒரு சவரன் ரூ.74,520க்கும், ஒரு கிராம் ரூ.9,315க்கு விற்பனையானது. அன்றைய தினம் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.130 என்கிற புதிய உச்சத்தை தொட்டது. பின்னர் நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒருசவரன் ரூ.74,440க்கும், ஒரு கிராம் 9,305க்கும் விற்பனையானது. அதேநேரம் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.131க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ. 400 ஒரு சவரன் ரூ. 74,840க்கு விற்பனையாகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ஒரு கிராம் 9,355 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author