இன்று மதுரையில் டாஸ்மாக் கடைகள் மூடல்..!

Estimated read time 1 min read

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உரிமம் பெற்ற தமிழ் நாடு மாநில வாணிபக் கழக (TASMAC) மதுபான சில்லரை விற்பனைக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டும் அதே நடைமுறையை பின்பற்றுவதற்காக அதிகாரிகள் கடுமையான அறிவுறுத்தல்கள் பிறப்பித்துள்ளனர்.
அதேபோல், மதுவிற்பனை தொடர்பான விதிமீறல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதனால், இன்று 11-ம் தேதி மதுரை மாவட்டம் முழுவதும் எந்தவித மதுபான விற்பனையும் நடைபெறாது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author