காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதிக்கும் வகையில், காப்பீட்டுத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, 2047 க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை அடைவதற்காக, அரசின் நிதித்துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா, காப்பீட்டுச் சட்டம் 1938, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டம் 1956 மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம் 1999 உள்ளிட்ட முக்கியச் சட்டங்களைத் திருத்த முன்மொழிகிறது.
இது, வெளிநாட்டு முதலீட்டு விதிகளை எளிமையாக்குவதுடன், கூட்டு உரிமத்திற்கான விதிமுறைகளையும், செலுத்தப்பட்ட மூலதனத்தைக் குறைப்பதற்கான விதிமுறைகளையும் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காப்பீட்டுத் திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல்
