தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா!

Estimated read time 0 min read

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் ஆளுநரும், பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, அகமதாபாத் திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் உபாத்யாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் 7 ஆயிரத்து 972 மாணவர்கள் பட்டம் பெற்றனர். அதில் 304 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டம் வழங்கி கௌரவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author