இந்தியாவில் மின்சார வாகனங்களின் (EV) விலைகள் அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களின் விலைக்கு இணையாக இருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை (அக்டோபர் 6, 2025) தெரிவித்தார்.
20வது FICCI உயர்கல்வி உச்சி மாநாடு 2025 இல் உரையாற்றும் போது அவர் இதைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் அபாயங்களை ஏற்படுத்தும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்து இருப்பதைக் குறைப்பதன் அவசியம் குறித்தும் அமைச்சர் வலியுறுத்தினார்.
“எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா ஆண்டுதோறும் ₹22 லட்சம் கோடி செலவிடுகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்குச் சுத்தமான எரிசக்தியை ஏற்றுக்கொள்வது மிகவும் முக்கியம்,” என்று கட்கரி கூறினார்.
பெட்ரோல் வாகன விலைக்கு இணையாக மாறும் மின்சார வாகனங்களின் விலை: நிதின் கட்கரி
