பாஜக ஆட்சிக்கு பின் நாட்டில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சத்தீஸ்கரில் 2023ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றபோது நக்சலிசத்தை முழுமையாக ஒழிக்க உறுதியான இயக்கத்தை தொடங்கியதாக தெரிவித்தார்.
அதன்படி, 2026 மார்ச் 31ஆம் தேதிக்குள் நாட்டில் நக்சலிசத்தை முழுமையாக ஒழிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினரின் தைரியம் மற்றும் தியாகத்தால், முன்னதாகவே நக்சலிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாவும் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், நக்சலிசத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசுக்கு பல மாநிலங்கள் உதவியதாக தெரிவித்த அமித்ஷா, சத்தீஸ்கரில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு எந்த உதவியும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார். எனினும், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நக்சலிசத்தை ஒழிக்க முடிந்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
