இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மீண்டும் மோதல்  

Estimated read time 0 min read

தெற்கு காசா நகரின் ரஃபா மற்றும் பிற பகுதிகளில் மீண்டும் சண்டை வெடித்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸும் உடனடியாகப் போர்நிறுத்த மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
ஹமாஸ் உறுப்பினர்களுடன் நடந்த பரஸ்பர துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) புதிய தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
கத்தார் செய்தி நிறுவனமான அல் ஜசீரா, ரஃபாவில் வெடிகுண்டு வெடித்ததில் இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்ததாகத் தெரிவித்தது.
ஒரு இஸ்ரேலிய அதிகாரி கூறுகையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள ரஃபா பகுதியில், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூடு மற்றும் ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு மூலம் தாக்குதலைத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்தே வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author