தீபாவளி பண்டிகை – காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

Estimated read time 0 min read

தீபாவளி பண்டிகையை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

சக்தி பீட தலங்களில் முதன்மையாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் விளங்குகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி

அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, நீல பட்டு உடுத்தி, பஞ்சவர்ண மலர்கள், பட்டு மாலைகள் நவரத்தின ஆபரணங்கள் அணிவித்தனர்.

சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மன், லட்சுமி, சரஸ்வதி தேவியர்களுடன் கோபுர வாசலுக்கு எழுந்தருளி காட்சியளித்தார்.

You May Also Like

More From Author