தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தை, ‘ஜெயிலர்’ இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அண்மை செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த புதிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலைப்பேச்சு வெளியிட்ட தகவல்படி இரு நடிகர்களும் நெல்சனின் கதைக்கு ஓகே சொல்லிவிட்டனராம்.
இந்தப் படம் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) மூலம் உருவாகிறது என்பதை இருவருமே உறுதி செய்துள்ளனர்.
எனினும், படத்தின் கதை மற்றும் இயக்குநர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ரஜினிகாந்த் முன்னதாக தெரிவித்திருந்தார்.
ரஜினி-கமல் இணையும் படத்தை ‘ஜெயிலர்’ இயக்குநர் நெல்சன் இயக்குகிறாரா? புதிய தகவல்கள்!
