வரவிருக்கும் முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாக, தொடக்க ஆட்டக்காரர் ப்ரத்திகா ராவல் ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரின் எஞ்சியப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) நவி மும்பையில் நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான குழுநிலை ஆட்டத்தின் போது அவருக்கு ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக அவர் விலகுவதை ஐசிசி திங்கள்கிழமை மாலை உறுதிப்படுத்தியது.
வங்காளதேச ஆட்டத்தின் 21வது ஓவரில், ப்ரத்திகா ராவல் எல்லைக் கோட்டிற்கு அருகில் ஈரமான அவுட்ஃபீல்டில் தடுமாறிக் கீழே விழுந்தபோது இந்தக் காயம் ஏற்பட்டது.
அவர் தனது கணுக்காலைத் திருப்பிக்கொண்டதால், சக வீராங்கனைகளின் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
ப்ரத்திகா ராவல் வெளியேற்றம்; மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவு
