அதிக எடைகொண்ட CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது  

Estimated read time 1 min read

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் மிக அதிக எடைகொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான CMS-03 ஐ, தனது LVM3-M5 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சியது.
24 மணி நேர கவுண்டவுனுக்குப் பிறகு, மாலை 5:26 மணிக்கு 43.5 மீட்டர் உயரமுள்ள ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
இந்தச் செயற்கைக்கோள் சுமார் 20 நிமிடப் பயணத்திற்குப் பிறகு, 180 கிமீ உயரத்தை அடைந்து, புவி ஒத்திசைவுப் பரிமாற்ற சுற்றுப்பாதையில் (Geosynchronous Transfer Orbit – GTO) வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author